sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி

/

கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி

கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி

கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி


ADDED : ஜன 15, 2024 10:47 AM

Google News

ADDED : ஜன 15, 2024 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில், பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் கடந்த, 11ம் தேதி தீ மிதி விழா நடந்தது. இதையடுத்து மலர் பல்லக்கு ஊர்வலம், நேற்று அதிகாலை கோலாகலமாக நடந்தது.

சம்பங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி, ரோஜா, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு மலர்களால், பிரமாண்ட பல்லக்கு தயாரிக்கப்பட்டது. அதன்பின் சீரியல் பல்பு மற்றும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர், நேற்று அதிகாலை, 1:15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டார்.

பாரியூரில் துவங்கி பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, முருகன்புதுார், நஞ்சகவுண்டன்பாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக, கோபி நகரை பல்லக்கு அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். பின் சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை அடைந்தது.






      Dinamalar
      Follow us