/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்வரத்து508 கன அடியாக சரிவு
/
பவானிசாகர் நீர்வரத்து508 கன அடியாக சரிவு
ADDED : டிச 21, 2024 01:35 AM
பவானிசாகர் நீர்வரத்து508 கன அடியாக சரிவு
புன்செய் புளியம்பட்டி, டிச. 21-
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம், 99 அடிக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம், 2,896 கன அடியாக இருந்த நீர்வரத்து, 508 கன அடியாக நேற்று குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 99.20 அடி, நீர் இருப்பு, 28.1 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 2300 கன அடி தண்ணீர்; அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 300 கன அடி நீர் மற்றும் குடிநீர் தேவைக்காக, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

