ADDED : ஜூலை 20, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், வ.உ.சி.,வீதியை சேர்ந்தவர் சபரிநாதன், 26; வீட்டு முன் நிறுத்தப்ட்டிருந்த இவரது அப்பாச்சி பைக் கடந்த, ௭ம் தேதி திருட்டு போனது.
புகாரின்படி சூரம்பட்டி போலீசில் வழக்குப்பதிந்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் தேடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீழ்சுண்ணாம்புகார தெரு முகைதீன் மகன் முகமது தமீம், 39, என்பவரை கைது செய்தனர். இவர் மீது திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பைக் திருட்டு உள்பட, 23 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.