/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவு கொட்டிய பிரச்னையில் மெத்தனம்; பா.ஜ., எச்சரிக்கை
/
கழிவு கொட்டிய பிரச்னையில் மெத்தனம்; பா.ஜ., எச்சரிக்கை
கழிவு கொட்டிய பிரச்னையில் மெத்தனம்; பா.ஜ., எச்சரிக்கை
கழிவு கொட்டிய பிரச்னையில் மெத்தனம்; பா.ஜ., எச்சரிக்கை
ADDED : மார் 29, 2025 07:31 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கிய மனுவில் கூறிய-தாவது: ஈரோடு மாவட்டம் ஆட்டையாம்பாளையம் பகுதி, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே இரும்பாலை கழிவு நீரை, இரவு நேரத்தில் குடிநீர் ஏரியில் ஊற்றி சென்றுள்-ளனர்.
இதனால் ஆட்டையாம்பாளையம் முதல் குளத்துப்பா-ளையம் வரை குளம், குட்டை, கிணறு, தடுப்பணையில் நீர் முற்-றிலும் பாதித்து, மீன்கள், தவளை இறந்துள்ளன. இந்நீரை குடிக்கும் ஆடு, மாடு, கோழிகளுக்கு நோய் ஏற்படும் அபாயமும், உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது. இப்பிரச்னையில் மாவட்ட நிர்-வாகம் தலையிட்டு, அந்நிறுவன உரிமத்தை ரத்து செய்து, நடவ-டிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பா.ஜ., சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.