/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குத்து சண்டையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
/
குத்து சண்டையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
குத்து சண்டையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
குத்து சண்டையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
ADDED : மே 02, 2025 01:23 AM
ஈரோடு:
சண்டிகரில் நடந்த தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கப்பதக்கம் வென்று வந்த இரு இளைஞர்களுக்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக குத்துச்சண்டை கவுன்சில் சார்பில், தேசிய குத்துச்
சண்டை போட்டி சண்டிகரில் கடந்த 26, 27ல் நடந்தது. தமிழகம், ஆந்திரா,கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர். இதில் நால்வர் தங்கப்பதக்கம் வென்றனர். ஈரோட்டை சேர்ந்த சாய் நிகலேஷ், அருணகிரி ஆகியோர் தங்கம் வென்று நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். இரு இளைஞர்களுக்கும் அவர்களது உறவினர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

