ADDED : ஜன 17, 2026 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா, துய்யம்பூந்துறை செங்கோடம்பாளை-யத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் அருண், 30. இவரது தந்தை பூசமணி கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாயார் வளர்மதியுடன், 50, வசித்து வருகிறார்.
அருண், பொக்லைன் சொந்தமாக வைத்து தொழில் செய்து வரு-கிறார். கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன், வெள்ளகோவிலில் உள்ள தனது துாரத்து உறவில் உள்ள காயத்திரி என்பவரை, கைக்குழந்-தையுடன் தனது வீட்டுக்கு கூட்டி வந்து வசித்து வந்தார். காயத்தி-ரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அவரது பெற்றோ-ருடன் காயத்திரி சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த ஜன., 1ம் தேதி மாலை வீட்டை விட்டு சென்ற அருண், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி வளர்மதி கொடுத்த புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

