ADDED : அக் 05, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பவானிசாகர் போலீசார் மற்றும் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வு செய்ததில் உண்டியலில் இருந்த காணிக்கை திருட்டு போனது தெரிந்தது. உண்டியலில், 5,000 ரூபாய் இருந்திருக்கலாம் என தெரிகிறது.