sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்

/

சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்

சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்

சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்


ADDED : ஜன 08, 2024 12:26 PM

Google News

ADDED : ஜன 08, 2024 12:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே புதியதாக கட்டி வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில், ஓசூரை சேர்ந்த கட்டட தொழிலாளி பலியானார். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, ஆர்.என்.புதுார் ஜவுளி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 50; வீட்டின் முன் பகுதியில் இரண்டு அறைகள் கட்டி வருகிறார்.

கட்டட பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோட்டயம், பரிசல்துறை நாகேந்திரன், 30; மற்றும் சிவராஜ், ஆனந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை, 11:௦௦ மணியளவில், கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில், பூச்சு வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து தரைமட்டமானது. மூவரும் இடிபாடுக்குள் சிக்கி கொண்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாததால், ஈரோடு தீயணைப்பு நிலையம் மற்றும் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற ஈரோடு தீயணைப்பு துறையினர், சிவராஜ் மற்றும் ஆனந்தனை உயிருடன் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகேந்திரனை நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us