sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சகோதரி வீட்டில் திருடியவர் கைது

/

சகோதரி வீட்டில் திருடியவர் கைது

சகோதரி வீட்டில் திருடியவர் கைது

சகோதரி வீட்டில் திருடியவர் கைது


ADDED : மே 28, 2025 12:59 AM

Google News

ADDED : மே 28, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,திண்டல், வீரப்பம்பாளையம், யு.ஆர்.சி. நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; தனியார் நிறுவன இன்ஜினியர்.

இவர் மனைவி தாரணி. தாரணியின் சகோதரர் வெங்கடேஸ்வரன், 21; கல்லுாரி படிப்பை முடித்து விட்டு தனியார் மொபைல் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி தாரணி வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த, 26ல் ஆறுமுகம் திருப்பூர் சென்று விட்டார். தாரணி பள்ளி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கணவருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் கலைந்து கிடந்தன.

பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, ஒன்னே கால் பவுன் தங்க செயின், அரை பவுன் மோதிரத்தை காணவில்லை.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தனர். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வெங்கடேஸ்வரன் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us