sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீபாவளி முடிந்து பணிக்கு புறப்பட்ட மக்களால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம்

/

தீபாவளி முடிந்து பணிக்கு புறப்பட்ட மக்களால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம்

தீபாவளி முடிந்து பணிக்கு புறப்பட்ட மக்களால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம்

தீபாவளி முடிந்து பணிக்கு புறப்பட்ட மக்களால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம்


ADDED : நவ 04, 2024 04:57 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், தொழிற்சாலை-களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கியிருந்து வேலை செய்கின்றனர்.

இதேபோல் ஈரோட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் வெளி மாவட்ட மாணவ-, மாணவியர் படிக்கின்-றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட, கடந்த, 29 மற்றும் 30ல் சொந்த ஊர்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் சென்-றனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஈரோட்டில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வந்திருந்தனர். அவர்-களும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிந்ததால், அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேற்று வந்த பஸ், ரயில்-களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணி-களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us