ADDED : டிச 23, 2024 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா, 28. கல், மணல் மற்றும் ஜல்லி வியாபாரம் செய்கிறார். நேற்று மதியம் வீட்டில், ஏர் புளோயர் கருவி மூலம், காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஒயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

