/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், இரண்டாம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு, பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி வரும் ஜூன், 3 முதல் 18 வரை, 13 நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு போன்றவை இலவசம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்களில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

