ADDED : மார் 06, 2026 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் வேம்பத்தி,
கரும்பாறைப்பள்ளம் (கொண்டையம்பாளையம் ஏரி), பிரம்மதேசம் ஏரி (சந்தியபாளையம் ஏரி), வரதம்பாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம், கோசனம், வேம்மாண்டம்பாளையம் ஏரி இயங்குகிறது. இந்த ஏரிகளில் மீன்பிடி உரிமை, 3 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. வரும், 9ம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிவரவேற்கப்படுகிறது. இதற்கான விபரத்தை www.tntenders.gov.in இணைய தள முகவரியில் காணலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2221912 என்ற எண்ணில் அறியலாம்.

