/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ-வாடகை உழவர் செயலி பதிவு செய்ய அழைப்பு
/
இ-வாடகை உழவர் செயலி பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஜன 01, 2025 01:14 AM
ஈரோடு, ஜன. 1-
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கான இயந்திரங்கள், கருவிகள், வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இவற்றை இ-வாடகை ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்யலாம். மண் தள்ளும் இயந்திரம்-3 உள்ளன. 1 மணி நேர வாடகை, 1,230 ரூபாய். சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், 2 உள்ளன.
ஒரு மணி நேரத்துக்கு, 890 ரூபாய் வாடகை. உழுவை இயந்திரம் - 14 உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு, 500 ரூபாய் வாடகை. இதுபோல, சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம்-1, டிரக் வகை நெல் அறுவடை இயந்திரம்-1, தேங்காய் பறிக்கும் கருவி-2, சிறிய வகை உழுவை இயந்திரம்-2, நிலநீர் ஆய்வு கருவி-1 என, ஈரோடு மற்றும் கோபி உப கோட்டங்களில் தலா, 13 உள்ளன. கூடுதல் விபரத்துக்கு அந்தந்த வட்டார பொறுப்பு பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.