/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாய நிலங்களில் நிபந்தனை நீக்க முகாம்
/
விவசாய நிலங்களில் நிபந்தனை நீக்க முகாம்
ADDED : அக் 14, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., அலுவலகத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலங்களில் நிபந்தனை நீக்க முகாம் நேற்று நடந்தது.
இதில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், முதல் கட்டமாக, 500க்கும் மேற்பட்ட நிபந்தனை நீக்கம் சம்பந்தமான மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் அணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நாகராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கவின் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.