/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்
/
மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்
மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்
மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்
ADDED : ஜன 04, 2025 07:20 AM
ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் சங்க செயலாளர் பாரதி தலை-மையில், வீட்டு உரிமையாளர் - குடியிருப்போர் நலச்சங்கம், அனைத்து வணிக சங்கங்கள் சார்பில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மணீஷிடம், மனு வழங்கி கூறியதாவது:
கடந்த, 2022-23ல் சொத்து வரி சீராய்வு செய்து, 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. தற்போது ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு என செய்வதை கைவிட வேண்டும். சொத்து வரி செலுத்த தாமதமானால், மாதம் 1 சதவீதம் என மீட்டர் வட்டி, கந்து வட்டி போல ஆண்டுக்கு, 12 சதவீதம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
பழைய கட்டடங்களில் குடியிருப்பும், வணிகமும் இருந்திருந்-தது. காலப்போக்கில் பயன்பாட்டை மாற்றியும், வணிக செயல்-பாட்டை நிறுத்திய பின்பும், 500 முதல், 3,000 சதவீதம் வரை வரி உயர்வு செய்வதை கைவிட வேண்டும். கோவையைவிட சிறிய மாநகராட்சியான ஈரோட்டில், சதுரடிக்கு 2 மடங்கு வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.