/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் சீரமைப்பு நிறைவு; அமைச்சர் தகவல்
/
வாய்க்காலில் சீரமைப்பு நிறைவு; அமைச்சர் தகவல்
ADDED : ஆக 06, 2025 12:59 AM
கோபி, கோபி அருகே வண்டிபாளையத்தில், கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில், கடந்த, 1ம் தேதி கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அங்கு நடக்கும் சீரமைப்பு பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்றும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாசனத்துக்கு திறந்த நீரை நிறுத்தாமலேயே பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே வேலை பாக்கியுள்ளது. அப்பணிகளும் முடிந்து விட்டால், எங்கேயும் நீர்க்கசிவு ஏற்படாது.
கீழ்பவானி வாய்க்காலில் பிற இடங்களில் உள்ள பழைய கட்டுமானங்கள் எங்கெங்கு உள்ளது என்பதை கண்காணிக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். தண்ணீர் நிறுத்திய பின் பழைய கட்டுமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

