sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

3.57 லட்சம் பேருக்கு கேன்சர் சோதனை; 53 பேருக்கு உறுதி

/

3.57 லட்சம் பேருக்கு கேன்சர் சோதனை; 53 பேருக்கு உறுதி

3.57 லட்சம் பேருக்கு கேன்சர் சோதனை; 53 பேருக்கு உறுதி

3.57 லட்சம் பேருக்கு கேன்சர் சோதனை; 53 பேருக்கு உறுதி


ADDED : அக் 06, 2024 02:49 AM

Google News

ADDED : அக் 06, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவ கல்லுாரி மையம் என, 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 4 லட்சத்து, 23,478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை; 2 லட்சத்து, 21,765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து, 21,816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 2 லட்சத்து, 8,699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. 86,063 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 22 பேருக்கும், 62,880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில், 9 பேருக்கும் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. மொத்தம் மூன்று லட்சத்து, 57,642 பேருக்கு பரிசோதனை நடத்தியதில், 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us