/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு
/
விடுமுறை தினத்தில் பணி 85 நிறுவனங்கள் மீது வழக்கு
ADDED : அக் 03, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று, விடுமுறை அளிக்காத நிறுவனங்களில், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
மொத்தம், 51 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 41 கடை, நிறுவனங்களிலும், 48 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 39 நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நடந்த ஆய்வில், ஐந்து என, 106 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 85 நிறுவனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.