sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு

/

போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு

போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு

போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு


ADDED : ஜூலை 31, 2025 01:54 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமி, சமூக வலை

தளத்தில் சென்னையை சேர்ந்த வாலிபருடன் பேசி வந்தார். இதன் மூலம் சிறுமியின் மொபைல் எண்ணை பெற்று, இருவரும் வீடியோ காலில் தனிமையில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், வீடியோ காலில் பேசியபோது எடுத்த ஆபாச வீடியோ, போட்டோக்களை சிறுமிக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி அளித்த புகார்படி, சென்னையை சேர்ந்த ஆதி, 24, என்பவர் மீது நேற்று முன்தினம் போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* பங்களாபுதூர் டி.என்.பாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ராம், 23, தொழிலாளி. கோபியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர், மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தனர். இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்திய, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், புகார்படி ராம் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us