/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறிய 1,027 பேர் மீது வழக்கு
/
போக்குவரத்து விதிமீறிய 1,027 பேர் மீது வழக்கு
ADDED : செப் 07, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம், மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 49 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 445 வழக்கு உள்பட, 1,027 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து, 3.௧௫ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர். மது போதையில் வாகனம் ஓட்டிய, 25 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தனர்.