sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

/

தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை


ADDED : அக் 04, 2024 01:04 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீயணைப்பு துறை சார்பில்

காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

ஈரோடு, அக். 4-

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், ஈரோட்டில் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகசேன் தலைமை வகித்தார். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தத்ரூவமாக செய்து காண்பித்தனர்.

குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால், காலி வாட்டர் பாட்டில், தேங்காய் மட்டை, வாகன டயர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக தப்பிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறையில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொடுமுடியில் காவிரிக்கரை, அந்தியூர் தீயணைப்பு துறை சார்பில் அத்தாணியில் பவானி ஆற்றில், பவானி தீயணைப்பு நிலையம் சார்பில், காடையாம்பட்டி ஏரியிலும், தீயணைப்பு துறையினர், மக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us