ADDED : ஜூன் 09, 2026 02:10 AM
பவானி; பவானி அருகே ஒரிச்சேரிப்புதுாரை சேர்ந்தவர் குருவாயி, 90; வயது மூப்பால் நேற்று முன்தினம் மாலை இறந்தார். உடலை நேற்று மதியம் அடக்கம் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பஞ்., நிர்-வாகம் சார்பில், ஒரிச்சேரிப்புதுாரில், பவானி ஆற்றங்கரையோரத்தில் இடம் ஒதுக்கி தரப்பட்-டது. ஆனால் சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி இல்லாததால், பாதை வசதி அமைத்து தர-வேண்டும், சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்றுமாறும், 2022 முதல் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். நடவ-டிக்கை இல்லாததால், மூதாட்டி சடலத்தை ஈரோடு கலெக்டர், அலுவலகத்துக்கு கொண்டு சென்று, போராட்டத்தில் ஈடுபடுவதாக மக்கள் அறிவித்தனர். தகவலறிந்து ஆப்பக்கூடல் போலீசார், பவானி தாசில்தார் வெங்கடேஸ்வரன் சென்றனர்.
மூதாட்டி உறவினர்களை, ஒரிச்சேரிப்புதுார் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு அழைத்து சென்று பேசினர். இது சம்பந்தமாக விரைவில் நடவ-டிக்கை எடுக்கப்படும். உடலை தற்போது நல்ல-டக்கம் செய்யுமாறும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர்.
