தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1ல் துவக்கம் 17 முதல் மக்கள் விபரங்களை உள்ளீடு செய்யலாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1ல் துவக்கம் 17 முதல் மக்கள் விபரங்களை உள்ளீடு செய்யலாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1ல் துவக்கம் 17 முதல் மக்கள் விபரங்களை உள்ளீடு செய்யலாம்


ADDED : ஜூலை 07, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கலெக்டர் கந்தசாமி, ஈரோடு கலெக்டர் அலுவலக வளா-கத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெ-டுப்பு-2027 பணிகள் துவங்கப்பட்டு, முதற்கட்ட-மாக வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வீடுகள் தொகுப்பு பணிகள் ஆக., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது.இப்பணிக்காக பிரத்யேகமாக சி.எம்.எம்.எஸ்., என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் வரும், 17ம் தேதி முதல், 31 வரை மக்கள், தங்கள் சுய விபரங்களை தாங்களாகவே உள்ளீடு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்-டுள்ளது.

உள்ளீடு செய்ததும், ஒரு ஒப்புதல் எண் செய-லியில் வரப்பெறும். இந்த எண்ணை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் கணக்கெ-டுப்பு பணிக்காக வீடுகளுக்கு வரும்போது தெரி-வித்தால், அதை உறுதி செய்த பின், பதிவேற்றம் செய்ததை உறுதி செய்வர். ஆக., 1 முதல், 30 வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில், 3,376 கணக்கெ-டுப்பாளர், 595 மேற்பார்வையாளர் ஈடுபடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us