ADDED : செப் 22, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கொங்கள்ளி செல்லும் சாலை, அண்ணாநகர் மற்றும் கரளவாடி பிரிவு பகுதியிலும், தாளவாடி-ராமாபுரம் சாலை சேன்நகர் பகுதியிலும், வளைவு பகுதிகளில் தொடர் விபத்து நடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த மூன்று இடங்களிலும் சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து குறையும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.