sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- 'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி

/

சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- 'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி

சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- 'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி

சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- 'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி


ADDED : நவ 03, 2024 01:00 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, திண்டல் மலையில்

கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா

சென்னிமலை, நவ. 3-

'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள், 1,320 படிக்கட்டு வழியாக மலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு யாக சாலையில் விநயாகர் வழிபாடு. யாக பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.

அதை தொடர்ந்து, 108 வகை திரவிய அபிஷேகம் செய்து, உற்சவ மூர்த்திகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு பிறகு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் காப்பு கட்டிவிட்டார். ஆயிரக்கணக்கானோர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

* ஈரோடு அருகேயுள்ள திண்டல் முருகன் கோவிலில், சஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சண்முகார்ச்சனை நடந்தது.






      Dinamalar
      Follow us