ADDED : ஜன 29, 2026 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே, காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய-மூர்த்தி, 20; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 19. தம்பதியருக்கு, 11 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் இரவு, பவானியிலிருந்து, 'யமாஹா' டூவீலரில், செம்புளிச்சாம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த, 'மாருதி ஈகோ' கார், பெட்ரோல் பங்க் செல்வதற்காக, வலது பக்கம் திரும்பியது.
இதை சற்றும் எதிர்பாராத சத்தியமூர்த்தி, அதிவேகமாக ஓட்டிச்-சென்ற டூவீலரை, கார் மீது மோதினார். இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அனைவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்-துவமனையில் சேர்த்தனர். இதில், 11 மாத பெண் குழந்தை உயி-ரிழந்தது. இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

