ADDED : டிச 26, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா
தாராபுரம், டிச. 26-
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில், தாராபுரம் புனித ஞான பிரகாசியர் ஆலயத்தில் நடந்த திருப்பலியில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து நடந்த, ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்வை, வட்டார தலைமை குரு ஜார்ஜ் தன்ராஜ் நடத்தி வைத்தார். நேற்று காலை 8:00 மணியளவில் நடந்த கூட்டத்திருப்பலியில், ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

