sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி

/

இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி

இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி

இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி


ADDED : மார் 29, 2025 06:27 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; ஈரோட்டில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி பேசுகையில், ''ஆலை கழிவுகளை தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், வயல் வெளி, நீர் நிலைகளில் கொட்டி செல்கின்றனர். ஆட்டையாம்பாளையத்தில் இரும்பாலை கழிவை கொட்டி, 10 கி.மீ., துாரத்துக்கான மக்கள் தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் உள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறுகையில், ''ஆட்டையாம்பாளையத்தில் கடந்த, 18ம் தேதி இரவில் இரும்பாலை கழிவை கொட்டினர். இரும்பாலை கழிவை கையாளும் நிபுணர்களை அழைத்து ஆய்வு செய்தோம். தடுப்பணை நீரை காலி செய்து, துார்வாரி, அடியில் படிந்த படிமத்தை அகற்ற கேட்டுள்ளனர். சித்தோடு போலீசில் கழிவை ஏற்றி வந்த லாரி, அதன் டிரைவர், உரிமையாளர், கழிவை வழங்கிய ஆலை மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்,'' என்றார்.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில், ''கழிவை வழங்கிய ஆலையின் கடந்த கால, தற்போதைய செயல்பாடு பற்றி பெருந்துறை மாவட்ட செயற்பொறியாளர் அறிக்கை வழங்கியதும், மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அனுப்பி நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us