sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாளவாடி, ஆசனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு

/

தாளவாடி, ஆசனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு

தாளவாடி, ஆசனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு

தாளவாடி, ஆசனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு


ADDED : ஆக 07, 2025 01:29 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சத்தியமங்கலம் தாலுகா தாளவாடி யூனியன், அரேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூதாளபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெத்தேசால் அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளி, ஆசனுார் பஞ்சாயத்து மேல்சீமை, ஓங்கல்வாடி பகுதிகளில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

அனைத்து பள்ளிகளிலும் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதா, மாணவர்கள் வருகை விபரம், ஆசிரியர் தேவை, அடிப்படை வசதிகளின் தேவைகளை கேட்டறிந்தார். பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி, ஆங்கில வாசிப்பு திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கெத்தேசால் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம், வாசிப்பு திறன், உணவு பொருட்கள் இருப்பு, கழிப்பறை, அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து, துாய்மையாக பராமரிக்க யோசனை தெரிவித்தார்.

கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பவானியில்






      Dinamalar
      Follow us