sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

/

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு


ADDED : செப் 26, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு விளையாட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், 13 வயதுக்கு ட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ.,; மாணவியருக்கு, 10 கி.மீ.,; 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ.,; மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம் போட்டி நடக்கும்.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாளை மறுநாள் (28ம் தேதி) காலை, 7:௦௦ மணிக்கு மாரத்தான் போட்டி நடத்தப்படும். 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ.,; பெண்களுக்கு, 5.கி.மீ.,; 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ.,; பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கிறது. கூடுதல் விபரத்திற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவரை தொடர்பு கொள்ளலாம். இரு போட்டிகளிலும் அதிகளவில் மாணவ, மாணவியர், பொதுப்பிரிவினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us