sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொய் வழக்கு பதிவு செய்ததாக பவானி போலீசார் மீது புகார்

/

பொய் வழக்கு பதிவு செய்ததாக பவானி போலீசார் மீது புகார்

பொய் வழக்கு பதிவு செய்ததாக பவானி போலீசார் மீது புகார்

பொய் வழக்கு பதிவு செய்ததாக பவானி போலீசார் மீது புகார்


ADDED : அக் 29, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொய் வழக்கு பதிவு செய்ததாக

பவானி போலீசார் மீது புகார்

ஈரோடு, அக். 29-

பவானி, மொண்டிபாளையத்தை சேர்ந்த காசிலிங்கம் மனைவி லட்சுமி, 55; குடும்பத்தினருடன் நேற்று வந்து, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் மகன் சத்தியசீலன் மொண்டிபாளையத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அப்போது பக்கத்து வீட்டின் கழிவுநீர் சாக்கடை சேதமானது. அதை, 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி கொடுத்தோம். ஆனால், பைப் லைன் போட்டு கட்டித்தருமாறு கேட்டதால் மீண்டும் புதிதாக அமைத்து கொடுத்தோம். இதை இடித்து அகற்றினர். தடுக்க முயன்ற என்னை தாக்கினர். இதுகுறித்து பவானி போலீசில் புகாரளிக்க, டி.எஸ்.பி., தலைமையில் செப்.,17ல் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், எதிர்தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதேசமயம் தங்கள் உறவுக்கார பெண்ணை தகாத வார்த்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, பக்கத்து வீட்டுக்காரர் அளித்த பொய் புகாரில், எங்கள் மீது பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொய் வழக்கு குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.






      Dinamalar
      Follow us