ADDED : ஜன 13, 2026 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பகுஜன் சமாஜ் கட்சி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர், ஈரோடு எஸ்.பி., சுஜாதா-விடம் மனு அளித்தனர். மனு விபரம்: அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்கு சங்கர் பணம் சம்பாதித்து வருகிறார்.
விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே சவுக்கு சங்கர் மீதும், அவரது உதவியாளர் மீதும் நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.

