sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி

/

இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி

இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி

இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி


ADDED : ஜன 13, 2026 07:06 AM

Google News

ADDED : ஜன 13, 2026 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் இ.வி.என்.சாலை மீன் மார்க்கெட் எதிரே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கிருந்து சிறிது துாரத்தில் கர்நாடகா வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 12:50 மணியளவில் கர்நாடகா வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு இருவர் வந்தனர். கல்லால் மையத்தில் இருந்த மிஷினை உடைத்துள்ளனர்.

இதில் மிஷின் சேதமானாலும் பணத்தை எடுக்க முடிய-வில்லை. அங்கிருந்து சென்ற இருவரும், பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்குள், 1:20 மணிக்கு புகுந்தனர். ஏ.டி.எம்., இயந்திர டிரேயை தொட்டவுடன் அலாரம் அடித்துள்ளது. இதனால் பயந்து போன இருவரும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு பின்னரே தகவல் தெரி-யவந்தது.

இது தொடர்பாக ஈரோடு டவுன், சூரம்பட்டி போலீசார் வழக்-குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த இரு ஏ.டி.எம்., மையங்களிலும் ஏற்கனவே திருட்டு முயற்சி நடந்துள்-ளது.

தற்போது இரண்டாவது முறையாக திருட்டு முயற்சி நடந்துள்-ளது. இரு ஏ.டி.எம்.,களிலும் இரவு காவலாளி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us