/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் புகார் மனு
/
பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் புகார் மனு
பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் புகார் மனு
பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் புகார் மனு
ADDED : ஆக 08, 2024 06:34 AM
கோபி: கோபி நகராட்சி கூட்ட அரங்கில், நேற்று நடந்த அவசர கூட்-டத்தில், பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது, 12வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சுமையா பானு, சேர்மன் நாகராஜிடம் (தி.மு.க.,) புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய, 12வது வார்டில் துப்பு-ரவு பணிக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவி என்பவர் தன் பணிகளை சரிவர செய்வதில்லை. இது சம்பந்த-மாக துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் வரை, வாய்மொழியாக புகார் செய்துள்ளேன். பணிக்கு வரும் ஒப்பந்த பணியாளர்களிடம், உங்கள் கவுன்சிலருக்கு இன்னும் இரு ஆண்-டுகள் தான் 'பவர்' இருக்கிறது. அதன்பின் அவர் எங்களிடம் தான் வந்தாக வேண்டும் என மிரட்டல் விடுக்கிறார்.
கவுன்சிலர் குறித்து, பொது வெளியில் பணியாளர்களிடம், அவம-ரியாதையாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். எங்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களிடம் அவர் எவ்வாறு அணுகுவார். மேலும், பொய்யான வருகை பதிவேடு மூலம், நக-ராட்சி நிர்வாக பணியில், அவர் முறைகேடு செய்துள்ளார். எனவே இந்த காரணங்களுக்காக, அவர் மீது துறை ரீதியாக நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.