ADDED : டிச 30, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை ஒழிப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க, ஈரோடு மாவட்ட செயலாளர் லலிதா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் பிரசன்னா வரவேற்றார். மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாலபாரதி, மாநில பொது செயலாளர் ராதிகா ஆகியோர், பெண்கள் மற்றும் குழந்-தைகள் மீதான வன்முறை ஒழிப்பு குறித்து பேசினர். முன்னதாக சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ண-கிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட பொரு-ளாளர் கீதா நன்றி கூறினார்.

