/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்., -எம்.பி., கார்த்தி மத்திய அரசுக்கு பாராட்டு
/
காங்., -எம்.பி., கார்த்தி மத்திய அரசுக்கு பாராட்டு
காங்., -எம்.பி., கார்த்தி மத்திய அரசுக்கு பாராட்டு
காங்., -எம்.பி., கார்த்தி மத்திய அரசுக்கு பாராட்டு
ADDED : மே 18, 2025 05:53 AM
தாராபுரம்: காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், தாராபுரம் வழியாக கோவைக்கு நேற்று சென்றார். அப்போது திருப்பூர் மாவட்ட காங்., சார்பில், தலைவர் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது: பகல்காமில் நடந்த தாக்குதல் விசித்திரமானது. டார்க்கெட் செய்து மத ரீதியாக இந்-துக்களை குறிவைத்து கொன்றுள்ளனர். இதை சாதாரண தாக்குத-லாக பார்க்க கூடாது. இதில் இந்திய ராணுவத்தின் நடவடிக்-கையை வரவேற்கிறேன். போர் நிறுத்தப்பட்டதை வரவேற்கும் வேளையில், இந்தியா நடத்திய தாக்குதலையும் வரவேற்கிறேன். மாற்றுக்கட்சி எம்.பி.,க்கள் தலைமையில், தாக்குதல் தொடர்பான குழு அமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும் முழுமை-யாக வரவேற்கிறேன். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா என்ற பற்று தான் இருக்க வேண்டும். இந்த முயற்சியை எடுத்த இந்திய அரசாங்கத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு கூறினார்.