/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2026 10:30 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகம் முன், மாநகர் மாவட்ட காங்., சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய பா.ஜ., அரசு, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயிகளையும், நாட்டு மக்களையும் வஞ்சிப்பதுடன் துரோக போக்கை கடைபிடித்துள்ளது. முரண்பாடான மத்திய அரசின் திட்டங்களால் மக்கள், வியாபாரிகள், தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கின்றனர். தமிழகத்துக்கான நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியது என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலர் ரவி, நிர்வாகிகள் மாரியப்பன், ஞானதீபம், எம்.ராஜேந்திரன், விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

