/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., ஆபீஸ், தீயணைப்பு நிலைய அலுவலகம் கட்டும் பணிகள் துவக்கம்
/
எஸ்.பி., ஆபீஸ், தீயணைப்பு நிலைய அலுவலகம் கட்டும் பணிகள் துவக்கம்
எஸ்.பி., ஆபீஸ், தீயணைப்பு நிலைய அலுவலகம் கட்டும் பணிகள் துவக்கம்
எஸ்.பி., ஆபீஸ், தீயணைப்பு நிலைய அலுவலகம் கட்டும் பணிகள் துவக்கம்
ADDED : அக் 25, 2025 01:24 AM
ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., - 3 ஏ.டி.எஸ்.பி., உட்பட, 20க்கும் மேற்பட்ட அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், தற்போதைய கட்டடத்துக்கு எதிரே, 10.80 கோடி ரூபாயில் புதிய கட்டடம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, 7.15 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. நேற்று காலை பூஜை நடந்தது. எஸ்.பி., சுதாஜா முன்னிலையில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார்
தலைமையில் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். இதேபோல் ஈரோடு தீயணைப்பு அலுவலக வளாகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கட்டுமான பணி துவங்கியது.
இதுகுறித்து காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி., அலுவலக வளாகம், 10.80 கோடி ரூபாயில், 31,921 சதுரடி இடத்தில், 28,455 சதுரடியில் கட்டடம் கட்டப்படும். தரைத்தளம், முதல், இரண்டாம் தளம் கட்டப்படும். இங்கு எஸ்.பி., - ஏ.டி.எஸ்.பி.,க்கள் அலுவலகங்கள், தனிப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன், கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம் அமையும். இப்பணி, 11 மாதத்தில் முடியும்.
அதுபோல தீயணைப்பு நிலையத்தில், இரு தளங்களுடன், 1,577 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. கீழ் தளத்தில், 5 தீயணைப்பு வாகனங்கள், அலுவலக ஜீப் நிறுத்தும் வசதி, தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் தீயணைப்பு நிலையம், வீரர்கள் ஓய்வறை, உபகரணங்கள் இருப்பு அறை, 2ம் தளத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அறை, கூட்ட அரங்கும் அமையும். இவ்வாறு கூறினர்.

