ADDED : செப் 25, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், பகுதி சபைக்கூட்டம் நேற்று நடந்தது. பகுதி சபை கூட்டத் தலைவர் சாபிரா பேகம் முத்துபாவா தலைமை வகித்தார்.
மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முதலாவது மண்டலத்தலைவர் பழனிசாமி, கமிஷனர் மணீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.