/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்தடையால் 67 ஓவர் டேங்க்குகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
/
மின்தடையால் 67 ஓவர் டேங்க்குகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
மின்தடையால் 67 ஓவர் டேங்க்குகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
மின்தடையால் 67 ஓவர் டேங்க்குகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
ADDED : டிச 22, 2024 01:32 AM
மின்தடையால் 67 ஓவர் டேங்க்குகளை
சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்
ஈரோடு, டிச. 22-
ஈரோடு மாநகராட்சியில், 67 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்
படுத்தும் பணி நடந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய, 484 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லுாரில் காவிரியாற்றில் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ஈரோடுக்கு குழாய்கள் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
சூரியம்பாளையத்தில், 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி, வ.உ.சி., பூங்காவில், 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இங்கிருந்து, 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டதால், குடிநீர் வினியோகம் செய்யப்படும், 67 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளை துாய்மைப்
படுத்தும் பணி நடந்தது. மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முன்னிலையில், 150க்கும் மேற்பட்ட மாநகராட்சி
ஊழியர்கள் ஈடுபட்டனர்.