/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஜன 13, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்-தாவணியில், காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 67 கால்நடைகள் வரத்தாகின.
மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 74 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 43 கால்ந-டைகள் 15 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படு-வதால், மாடுகளுக்கு கொம்பு கயிறு இலவசமாக வழங்கப்பட்-டது. வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், சுண்டல் வழங்கினர்.