/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 01:41 AM
கரூர்,:கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அதில், கொலை வழக்கு, வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் நேர கன்ன கனவு குற்றவாளிகள், ரவுடிகள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்து, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா விளக்கம் அளித்து பேசினார்.
அதை தொடர்ந்து, குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார், மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுமதி,
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.