sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை

/

ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை

ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை

ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை


ADDED : மே 15, 2024 02:00 AM

Google News

ADDED : மே 15, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:அரசு வேலை வாங்கி தருவதாக, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

ஈரோடு, மூலப்பாளையம், விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மார்ட்டின், 37; கடந்த, 2019ல் கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரிலிகேர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றினார்.அதே நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்தவர் கோவை, வேடப்பட்டி பார்த்திபன், 38; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பானது. இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ராஜேஷ் மார்ட்டின் உள்ளிட்ட நான்கு பேரிடம் ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமாக, 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை; பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து ராஜேஷ் மார்ட்டின், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.

விசாரணை நடத்தியதில், பார்த்திபன் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும், வேறொரு வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், ஒரு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சங்கீதா கூறியதாவது:மோசடி செய்த பணத்தை, பார்த்திபன் எதிலாவது முதலீடு செய்துள்ளாரா? என விசாரித்தோம். ஆனால், முழு பணத்தையும் செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். ஏற்கனவே போலீசார் அவரின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், ஈரோட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us