ADDED : ஜூலை 26, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தியாகு, 28, விவசாயி; இவரின் மனைவி திவ்ய தர்ஷினி, 20; தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். பிறவியிலேயே தியாகு வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி; கடந்த, 24ம் தேதி காலை திவ்யதர்ஷினி மாயமானார்.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாமனார் விஜயபுரி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் தேடி வருகின்றனர்.