ADDED : மே 21, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 33, கூலி தொழிலாளி. இவர் மனைவி கவிதா, 25; தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. மூன்று மாதத்துக்கு முன் சந்தோஷ்குமார், வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
இதனால் கவிதா தனது மகளுடன், மாமியாரான சுசீலா, 50, வீட்டில் வசித்தார். கடந்த, 15ம் தேதி மாலை மகளுடன் கவிதா மாயமானார்.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சுசீலா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.