sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு

/

சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு

சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு

சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு


ADDED : நவ 15, 2024 02:02 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலையில் ஆக்கிரமிப்பை

அகற்ற இன்றுடன் கெடு நிறைவு

சென்னிமலை, நவ. 15-

சென்னிமலையில் தினசரி மார்க்கெட் முதல் வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி மற்றும் காங்கேயம் ரோடு வழியாக உப்பிலிபாளையம் ரோடு பிரிவு வரை, தெற்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி வழியாக ஊத்துக்குளி ரோடு மேலப்பாளையம் வரை, சாலையோர ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி, ஒரு மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கினர். தீபாவளி பண்டிகையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்கள் அவகாசம் கேட்டதால், நவ.,௧௫ம் தேதி வரை அனுமதித்தனர். இன்றுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட், தெற்கு ராஜவீதி மற்றும் மேற்கு ராஜவீதிகளில் நேற்றே சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இன்றுடன் கெடு முடியும் நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us