sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்

/

மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்

மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்

மாநகராட்சி சாலை பணியில் பலி: பெண் உடலை பெற மறுத்து மறியல்


ADDED : மே 03, 2024 06:44 AM

Google News

ADDED : மே 03, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை : ஈரோட்டை அடுத்த பெரியசேமூர், எஸ்.எஸ்.பி., நகரில் மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த, பவானி, பெரியபுலியூரை சேர்ந்த பிரபாகரன் மனைவி சரஸ்வதி, 30, கலவை இயந்திரத்தில் சிக்கியதில் பலியானார். அவரது உடல், பிரதே பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் சரஸ்வதி குடும்பத்துக்கு, அரசு சார்பில் இழப்பீடு கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், உடலை பெற மறுத்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை ஒன்றிய வி.சி., செயலாளர் முரளி தலைமையில், மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் சாலை அமைக்கும் பணியில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.சி., மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில், நேற்று மனு வழங்கினர்.






      Dinamalar
      Follow us