sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

/

பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு


ADDED : ஜன 11, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சியை பேரூ-ராட்சியாக தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து, ஊராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் என நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாசிப்பிடாரியூர் பேரூராட்சியாக மாறினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி, வாடகை என அனைத்தும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது பற்றியும் ஆலோசித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர். இதன் அடிப்படையில் ஊராட்சி மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்-டது. போராட்டம் நடத்தும் தேதி பிறகு அறிவிப்பதாக தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us