/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
/
பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜன 11, 2025 02:53 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சியை பேரூ-ராட்சியாக தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து, ஊராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் என நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாசிப்பிடாரியூர் பேரூராட்சியாக மாறினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி, வாடகை என அனைத்தும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது பற்றியும் ஆலோசித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர். இதன் அடிப்படையில் ஊராட்சி மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்-டது. போராட்டம் நடத்தும் தேதி பிறகு அறிவிப்பதாக தெரிவித்-தனர்.