sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு-நசியனுார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

/

ஈரோடு-நசியனுார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

ஈரோடு-நசியனுார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

ஈரோடு-நசியனுார் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை


ADDED : நவ 25, 2024 02:27 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் முக்கிய சாலையான, பெருந்துறை சாலைக்கு அடுத்தபடியாக நசியனூர் சாலை உள்ளது. இந்த சாலையின் இரு-புறமும் வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் உள்-ளன. இதனால் சாலையில், 24 மணி நேரமும் மக்கள் நட-மாட்டம், வாகன போக்குவரத்து உள்ளது. நசியனுார் சாலை வழி-யாக தான் காஞ்சிக்கோவில், திங்களூர் செல்ல பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.

மேலும் சாலையில் சம்பத் நகர் பிரிவு, நாராயணவலசு, வெட்டுக்-காட்டு வலசு, வில்லரசம்பட்டி போன்ற ஏராளமான சந்திப்புகள் உள்ளன. இந்த சாலை இருவழிச்சாலையாக உள்ளதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதுதவிர நசியனூர் சாலையில் இருவழிச்சாலையை அடையாளப்படுத்தும் சென்டர் மீடியன் (தடுப்பு சுவர்), போதிய வேகத்தடை, எச்சரிக்கை அறிவிப்பு உள்-ளிட்ட சாலை பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இதனால் இரவில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்துள்ளது.சாலை விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், நசியனுார் சாலையை விரிவுப்படுத்தி தரம் உயர்த்த வேண்டும். சென்டர் மீடியன், விபத்து ஏற்படும் இடங்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்-தடை, எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us